மாடல மறையோன் மூலமாகத் தெரியவரும் காப்பிய
நிகழ்வுகள் யாவை?
கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்தவற்றைக் கேட்ட
அவர்களின் தாயர் இறந்தமை, தந்தையர் துறவு பூண்டமை,
மாதவியும் மணிமேகலையும் துறவு பூண்டமை, கவுந்தியடிகள்
உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தமை, மாதரி மாண்டமை,
பாண்டியன் வெற்றிவேற் செழியன் ஆயிரம்
பொற்கொல்லர்களைப் பத்தினிக் கடவுளுக்குப் பலியிட்டமை
ஆகியவை ஆகும்.
|