தேவர் பற்றி எழுந்த பழமரபுக் கதை என்ன? அக்கதை
எழுந்ததற்கான காரணம் யாது?
தேவர் சங்கத் தமிழ்ப் புலவர் குழுவில் இருந்து தமிழ்ச்சுவை
பருகினார். அப்போது தமிழ்ப்புலவர் ஒருவர் சமணர்களுக்கு
இன்பச்சுவை பாடத் தெரியாது என்றார்; அதற்காகவே
இன்பச் சுவைபடத் தன் காப்பியத்தைப் படைத்தார். இதனால்
அவர் துறவில் சந்தேகப்பட காய்ச்சிய இரும்பைத் தன்
கையிலும் உடம்பிலும் அழுத்தி - அது சுடாதிருக்கச் செய்து,
தன் துறவை மெய்பித்ததார். இதுவே கதை. இதற்கான
காரணம் சிந்தாமணி காமச் சுவைபட அமைவதே.
|