யாக்கை நிலையாமை குறித்துக் குண்டலகேசி குறிப்பிடும்
கருத்து யாது?
‘நாம் பிறந்தது முதல் செத்துக் கொண்டிருக்கிறோம். முதலில்
குழந்தைத் தன்மை, அடுத்து இளமை சாகிறது. தொடர்ந்து
காளையர் நிலை மாறுகிறது. காமம் நுகரும் பருவம் சாகிறது.
பின் மூப்பு ஆகிறது. இவ்வாறு மனித உடல் நாளும் நாளும்
மாறிக் கொண்டும் செத்துக் கொண்டும் இருக்கிறது’ என்பதன்
மூலம் யாக்கை நிலையாமையை எடுத்துரைக்கிறது
குண்டலகேசி.
|