பாடம் - 1

A01131 இரட்சணிய யாத்திரிகம்

EAUDIO

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இரட்சணிய யாத்திரிகம் என்ற கிறித்துவக் காப்பியத்தை இயற்றிய எச்.ஏ. கிருஷ்ணபிள்ளையைப் பற்றிக் கூறுகிறது. இரட்சணிய யாத்திரிகம் எழுதப்பட்டதற்கு உரிய பின்புலத்தைக் கூறுகிறது. இரட்சணிய யாத்திரிகத்தின் காப்பியப் பெருமையை விளக்குகிறது. காப்பியத்தின் கதை மாந்தர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. காப்பியத்தின் இலக்கியத் திறனை எடுத்துரைக்கிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • இரட்சணிய யாத்திரிக ஆசிரியர் பற்றி அறியலாம்.

  • தமிழகத்திற்கு வெளியிலிருந்து வந்த சமயங்களின் கோட்பாடுகள், தமிழில் இலக்கிய வடிவம் பெறும் பாங்கை அடையாளம் காணலாம்.

  • இரட்சணிய யாத்திரிகத்தின் காப்பிய அமைப்பு, காப்பியக் கதை, காப்பியத் தன்மை ஆகியவைகளை அறிந்து கொள்ளலாம்.

  • இரட்சணிய யாத்திரிகத்தின் சிறப்புக் கூறுகள் எவை என்பதையும் அடையாளம் காணலாம்.

பாட அமைப்பு