தன் மதிப்பீடு : விடைகள் - II
2) |
பிள்ளை இல்லாத குறை பற்றிப் புலவர் கூறுவதைச்
சுருக்கிக் கூறுக. குழந்தைப் பேறு இல்லாதவர்கள் மிக்க செல்வங்கள் பெற்று இருந்தாலும் வறுமை உடையவர்களே. குழந்தை இல்லாத குறை என்பது தேன்மலர் போன்ற கண்ணின் கருமணியில் வெள்ளைப் புரை வளர்ந்தது போன்ற குறைபாடு ஆகும். பிள்ளை பெறாதோர் உண்ணும் உணவு வேம்பு போன்று கசப்பானது ஆகும். |