தன் மதிப்பீடு : விடைகள் - II

6)

அஸீஸின் காதலியின் அழகைக் கவிஞர் எவ்வாறு வருணிக்கிறார்?

காதலி ஆனின் பாதங்களைப் பார்த்த வண்டுக் கூட்டங்கள், தாம் இந்நாள் வரை பார்க்காத அழகிய மலர்கள் எனக் கருதி மொய்ப்பதற்கு நெருங்கின. அப்பொழுது கால்கள் அசைய, தண்டைகள் ஒலி எழுந்தன; வண்டுகள் திசை மாறி ஓடின; அவளது அழகிய கண்களைக் கெண்டை மீன்கள் என்று நினைத்துக் கொக்கு உற்றுப் பார்த்தது. மீன்கள் நீரில் அல்லவா இருக்கும், இவை தரையில் எப்படி வந்தன என ஏமாந்தன கொக்குகள். இவ்வாறு காதலியின் அழகை வருணிக்கிறார்.

முன்