ஒன்று என்னும் எண்ணின் அடியாக ஒருவன்,
ஒருத்தி என்ற
பெயர்கள் வரும்.
ஒருவன் என்பதை நோக்கிப் பெண் பாலாக ஒருவள் எனக் கூறக் கூடாது. அதே போல ஒருத்தி என்பதை நோக்கி ஆண்பாலாக ஒருத்தன் என்று கூறக் கூடாது. ஒன்றுக்கு மேல் இரண்டு மூன்று முதலாகிய எண்களால் ஆண்பால் பெயரும், பெண்பால் பெயரும் வாரா. அதாவது இருவன், இருத்தி என்றாற் போன்ற பெயர்கள் வாரா. ஒருவர், இருவர், மூவர் எனவரும்; இவை இருபாலாருக்கும்
பொதுவாகும்.
மேலும் இவ் ஒருவர் என்ற சொல், சொல் அளவில் பன்மையாய்ப் பொருள் அளவில் ஒருமையாய் இங்கு வந்துள்ளது. ஒருவர் என வழங்கும் சொல், உயர்திணை ஆண்பால், பெண்பால் இரண்டிற்கும் பொதுவாய் அத்திணைக்குரிய பன்மை வாய்பாட்டு வினையைக் கொண்டு முடியும். எடுத்துக்காட்டு
இங்கே,
ஒருவர் நிற்பான்
எனப் பகுதிக்கு ஏற்ப ஒருமைச் சொல்லைக் கொள்ளாது,
ஒருவர் நிற்பார் என விகுதிக்கு ஏற்பப் பன்மைச் சொல்லையே
கொண்டு
முடிந்தது. மேலும், உரையாசிரியர் கூறும் கருத்தை இங்கே காணலாம். உயர்த்திக் கூறும் பொருட்டு ‘ஆர்’ என்னும் விகுதி பெற்ற இருதிணைப் பொதுப்பெயரும், பால்பகா அஃறிணைப் பெயரும், சிறுபான்மை உயர்திணைப் பெயரும் பன்மைச் சொல்லோடு முடியும். எடுத்துக்காட்டு
|