5.5 வினையெச்சம் - விளக்கம்
வினைச் சொல்லைக் கொண்டு முடியும் எச்சச்சொல்,
வினையெச்சம் எனப்படும். அது வினைப்பகுதி, காலம் காட்டும் இடைநிலை, வினையெச்ச விகுதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வினையெச்சம் காலமும் செயலும் உணர்த்தும்.
(எ.கா) | ஓடி வந்தான் |
| கிழித்துக் கொடுத்தான் |
5.5.1 வினையெச்சம் மூவிடங்களிலும் இடம்பெறல்
வினையெச்சம் இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாக வரும்.
(எ.கா) | தன்மை ஒருமை
| - உண்டு வந்தேன் |
| தன்மைப் பன்மை | - உண்டு வந்தோம் |
| முன்னிலை ஒருமை
| - உண்டு வந்தாய் |
| முன்னிலைப் பன்மை
| - உண்டு வந்தீர் |
| படர்க்கை ஆண்பால்
| - உண்டு வந்தான் |
| பெண்பால் | - உண்டு வந்தாள் |
| பலர்பால் | - உண்டு வந்தார் |
| ஒன்றன்பால் | - உண்டு வந்தது |
| பலவின்பால் | - உண்டு வந்தன |
|