முற்றுத் தொடர்மொழி என்பது, எழுவாயும்
பயனிலையும்
செயப்படுபொருள் முதலியவைகளோடு சேர்ந்தும் சேராதும்
பொருள் முடிவு பெற்று நிற்கும்
தொடராகும். இதனை
வாக்கியம் என்றும் கூறுவர்.
எ.டு.
நன்னன் வந்தான்.
புலி மானை வேட்டையாடியது.
முதல் தொடரில் ‘நன்னன்’
எழுவாய். அந்த எழுவாய்
‘வந்தான்’ என்னும் வினைமுற்றைப் பயனிலையாகக் கொண்டு
பொருள் முடிவு பெற்றது. அதேபோல்
‘புலி’ என்னும்
இரண்டாம் தொடரின் எழுவாய்
‘மான்’ என்னும்
செயப்படுபொருளையும் ‘வேட்டையாடியது’ என்னும் வினைப் பயனிலையையும் பெற்றுப் பொருள் முடிவு பெற்றது.
|