4.2 ஒரு சொல் குறித்த
பல பொருள்கள் |
|||||||||||||||||||
|
ஒரு சொல் ஒரு பொருளைக் குறிப்பதும் உண்டு; பல பொருளைக் குறிப்பதும் உண்டு.
(எ-டு:)
இவ்வாறு, பல பொருள் குறித்த சொல் ஒரு தொடரில் வரும் பொழுது எவ்வாறு பொருள் கொள்வது என்பதற்குச் சான்றோர்கள் வழிகாட்டியுள்ளனர். பல பொருள் குறித்த சொல்லை ஒரு தொடரில் பயன்படுத்தும் பொழுது, வினை, சார்பு, இனம், இடம் என்பனவற்றைக் குறிக்கும் சொற்களைச் சேர்த்துச் சொல்லி அதன் பொருளைத் தெளிவுபடுத்துதல் மரபு. மா என்னும் சொல் மாமரத்திற்கும் வண்டிற்கும் குதிரைக்கும் இலக்குமிக்கும் பொதுவான பல பொருள் ஒரு சொல். இப்பொருள்களுள், (எ-டு:)
இவ்வாறு இல்லாமல் மா ஏறினான், மா யாது என்றால் மா என்பதன் பொருள் விளங்காது. அதனை விளக்குவதற்காக மா என்பதனோடு மேலே குறிப்பிட்டவாறு வேறுபடுத்திக் காட்டும் சிறப்புச் சொல்லையும் அறிஞர் சேர்த்துச் சொல்வது மரபு ஆகும்.
வினைசார்பு இனம்இடம் மேவி விளங்காப்
(நன்னூல்-390) |