|
5. |
முத்தொள்ளாயிர நூலின் பாடுபொருளாக எதைக் கூறலாம்? |
முத்தொள்ளாயிரம் மூவேந்தர் புகழ்பாடுவது. மன்னர்களின் வீரம், கொடை, தலைநகர், அவர்கள் குதிரைகளின் மறம், களிறுகளின் மறம் ஆகியவையும், பகை மன்னர்களின் நாடுகளை அழித்துப் புகழ் பெற்றமையும், அவர்களிடம் திறை கொண்டமையும் புகழப்பட்டுள்ளன. |