பாடம் - 6

A04136  பதினைந்தாம் நூற்றாண்டு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


இக்காலக் கட்டத்தில் உதயண குமார காவியம் போன்ற காப்பியங்களும், அரிச்சந்திர புராணம் போன்ற புராணங்களும் தோன்றின. மேலும் திருப்புகழ், திருக்கலம்பகம் போன்ற சமயம் சார்ந்த இலக்கியங்களும், சித்திரமடல், கபிலரகவல் போன்ற சமயம் சாராத இலக்கியங்களும் எழுதப்பட்டன. இலக்கண நூல்களும், நிகண்டுகளும் கூட இக்காலக் கட்டத்தில் வெளிவந்தன. மேலும் திருக்குறள், தொல்காப்பியம் போன்றவற்றிற்குச் சிறந்த உரை நூல்களும் எழுந்தன. இவை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?



  • 15ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றை அறியலாம்.
  • மூல நூல்களுக்கு ஈடாக உரைகளின் பங்களிப்பை உணரலாம்.
  • சித்தர்களின் இலக்கியப் பங்களிப்பை அடையாளம் காணலாம்.
  • தத்துவ நூல்களின் பெருக்கத்தை உணரலாம்.
  • இலக்கியத் திரட்டுகளின் பெருமைகளைப் புரிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு