5.0 பாட முன்னுரை

இருபதாம் நூற்றாண்டு அறிவியல் யுகம், நாவல் நூற்றாண்டு என்றெல்லாம் போற்றப்படுகின்றது. இக்காலத்தின் போக்கிற்கு ஏற்ப இலக்கியமும் புது வடிவம் பெற்றது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் விடுதலை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம், காந்தியம், பொதுவுடைமை, குழந்தை இலக்கியம் போன்றன இலக்கியத்தை இயக்கின. நாடகத் தமிழ் மலர்ச்சி பெற்றது. பல்துறையிலும் தமிழ் வளர்ச்சி பெற்றது.