நாட்டுப்புறவியல் இலக்கியத்தைப் படைப்பவர் நாட்டுப்புற
மக்கள் ஆவர். எனவே இம்மக்கள் யாவர்? அவர்களது
படைப்புகள் எத்தகு சூழலில், எத்தகு அமைப்பில்
உருவாகின்றன என்பனவற்றை இப்பகுதியின் மூலம் தெரிந்து
கொள்ளலாம்.
படைப்பாளன்
ஒரு நாட்டுப்புறப் பாடலைப் படைத்தவர்
இவர்தான் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனென்றால் அது மனத்தின்
அனுபவ வெளிப்பாடாகக் கிராமத்துச் சூழலில் உருவாவது ஆகும். இப்பாடலின் தன்மைகள்
குறித்து மேலும் தெரிந்து கொள்ளலாம்.
படைப்பின் தன்மைகள்
நாட்டுப்புற பாடல்களுக்கு எனச் சில தனித்தன்மை
வாய்ந்த
பண்புகள் காணப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்,
• வாய்மொழியாகப் பரவும் தன்மையது (It is oral)
• மரபு வழிப்பட்டது (It is traditional)
• குறிப்பிட்டு இவர் தான் படைப்பாளர் என்று இல்லாதது
(It is usually anonymous)
• பல்வேறு வடிவங்களாகத் திரிபடையும் பண்பினது.
(It exists in different versions)
• ஒருவித வாய்பாட்டுக்குள் அடங்குவது
(It tends to become formalized)
ஆகிய தனித்தன்மைகள் கொண்டது. |