முதலிய தொடர்கள் உலாவின் கூறுகளாக
விளங்குகின்றன. மங்கல அணி உலாச் சென்றபோதும்
தலைக்கோல் உலாச் சென்றபோதும் வெண்குடை முதலிய
சின்னங்கள் எடுத்துச்
செல்லப்பட்டுள்ளன.
திருநாவுக்கரசர் தாம் வாழ்ந்த காலத்தில்
திருவாரூரில்
நடைபெற்ற திருவாதிரைத் திருவிழாவைப் பற்றிக்
கூறியுள்ளார். இறைவன் திருத்தேரில் ஏறித்
திருத்தொண்டர்
குழாம் புடைசூழ உலாச் சென்றதை
வருணித்துள்ளார்.
(தேவா. 4.21.8)
உதயணனுக்கும் வாசவதத்தைக்கும் திருமணம் நிகழும்
முன்பு உலாச் செல்கின்றனர். இதனைப் பெருங்கதை
கூறுகின்றது. உதயணன் வீதி உலா வருவதை நகர் வலம்
கண்டது எனும் பகுதி சிறப்புடன் விளக்கி உள்ளது. சீவக
சிந்தாமணியில் சீவகன் உலா குறிக்கப்பட்டுள்ளது.
வேடர்கள்
கவர்ந்து சென்ற ஆநிரைகளைச் (பசு) சீவகன் மீட்டு
வருகிறான். மீட்டு வந்த வெற்றிப் பெருமிதத்தோடு வீதி
உலாச் செல்கிறான். சீதையை மணம் செய்து கொள்ளும்
முன்பு இராமன் மிதிலை வீதிகளில் உலா
வருகின்றான்.
இதனை உலாவியற் படலம் விவரிக்கிறது.
முத்தொள்ளாயிரம் போன்ற தொகுப்பு நூல்களிலும்
உலாச் செய்திகள் இடம் பெற்று உள்ளன.
மூவேந்தர்களாகிய
சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் மகளிர்க்குக் காம
நோய் உண்டாக வீதி உலாச்
செல்கின்றனர். இதனை
முத்தொள்ளாயிரம் கூறுகின்றது.
பல்லவர் காலத்தில்தான்
முதல் உலா படைக்கப்பட்டுள்ளது. சேரமான் பெருமாள் நாயனார் படைத்த
திருக்கயிலாய ஞான உலாவே உலா நூல்களில் காலத்தால் முந்தியது.
இதனை ஆதி உலா என்றும் கூறுவர். இறைவன் முன்னர் அரங்கேற்றப்பட்ட
சிறப்பினை உடையதால் இது ஞான உலா என்றும் பெயர் பெற்றது.
சில உலா நூல்கள்
வருமாறு:
திருக்கயிலாய ஞான உலா
சேரமான் பெருமாள் நாயனார் சிவபெருமான் மீது
பாடியது இந்த உலா. இதுவே முழுமை பெற்ற முதல் உலா
நூல் என்பர். திருமாலும் பிரம்மனும் காணமுடியாத
பரம்பொருள்
ஆகிய சிவபெருமானின் காட்சியைத் தேவர்கள்
காண
விரும்பினர். இறைவனும் சிறந்த அணிகளை அணிந்த
சுந்தரத் (அழகான) தோற்றத்துடன் திருவீதியில் உலாச்
சென்றார்.
இந்நிகழ்ச்சியை விவரிப்பதே இந்த உலா.
ஆளுடைப் பிள்ளையார் திருவுலாமாலை
நம்பியாண்டார் நம்பி இயற்றியது. திருஞானசம்பந்தர்
பாட்டுடைத்தலைவர். இவ்வுலாவில் ஏழு பருவ மகளிரின்
செயல்கள் தனித்தனியே கூறப் பெறாமல், ஒன்றாகக் கூறப்
பெற்றுள்ளன.
திருவாரூர் உலா
அந்தகக் கவி வீரராகவ முதலியார் இயற்றியது.
திருவாரூர்
இறைவனைப் பற்றியது.
திருக்கீழ்வேளூர் உலா
இந்த நூலையும் அந்தகக்கவி வீரராக
முதலியாரே இயற்றி
உள்ளார். இவ்வுலா வேளூர் இறைவன்
கேடிலியப்பர் மீது
பாடப்பட்டது.
தமிழன் உலா
இநநூலை இராசை. கி. அரங்கசாமி இயற்றி
உள்ளார்.
தமிழர் வரலாற்று நாயகர்களின் பரம்பரையில்
வந்த தமிழன்
ஒருவன் உலா வருவதை இந்த உலா விவரிக்கிறது.
தமிழரின்
வரலாறு, பண்பாடு, மொழி முதலியவற்றின் ஒட்டு
மொத்தமான குறியீடாக இத்தலைவனை ஆசிரியர் படைத்து
உள்ளார்.
|