| 
 6.3	உடன்நிலை மெய்ம்மயக்கம் 
 ஒரு மெய் எழுத்துக்குப் பின் அதே மெய் எழுத்து வருவது உடன்நிலை மெய்ம்மயக்கம் எனப்படும். 
 மெய் எழுத்துகள் பதினெட்டில் ர், ழ் என்னும் மெய் எழுத்துகளைத் தவிர ஏனைய பதினாறு மெய் எழுத்துகளும் உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் வரும். 
 
 |  உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் வரும் மெய்எழுத்துகள்:  | 
 |  க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ல், வ், ள், ற், ன்  |  
  |   
என்னும் மெய் எழுத்துகள் உடன்நிலை மெய்ம்மயக்கத்தில் இடம்பெறும். 
• ‘க்’ என்னும் எழுத்து 
மக்கள் 
அக்காள்  
• ‘ங்’ என்னும் எழுத்து
 
 அங்ஙனம் (அவ்விதம்) 
  எங்ஙனம் (எவ்விதம்)  
• ‘ச்’ என்னும் எழுத்து 
உச்சி 
அச்சு  
• ‘ஞ்’ என்னும் எழுத்து 
அஞ்ஞான்று (அப்பொழுது) 
எஞ்ஞான்று (எப்பொழுது)
 
• ‘ட்’ என்னும் எழுத்து 
பட்டம் 
  சட்டை 
 
• ‘ண்’என்னும் எழுத்து 
அண்ணன் 
  கண்ணீர்
 
• ‘த்’என்னும் எழுத்து 
கத்தி 
பத்து  
• ‘ந்’என்னும் எழுத்து 
வெந்நீர்
 
  செந்நீர் 
• ‘ப்’என்னும் எழுத்து 
கப்பல்
 
  குப்பை  
• ‘ம்’ என்னும் எழுத்து 
அம்மை 
   அம்மாடு  
• ‘ய்’ என்னும் எழுத்து 
 செய்யான்
 
  வெய்யோன் (கதிரவன்)  
• ‘ல்’ என்னும் எழுத்து 
எல்லாம்
  
  நல்லவன்  
• ‘வ்’ என்னும் எழுத்து 
செவ்வாய்
 
  கொவ்வை  
• ‘ள்’ என்னும் எழுத்து 
 பள்ளம்
 
  தள்ளு  
• ‘ற்’ என்னும் எழுத்து 
 குற்றம்
 
  காற்று  
• ‘ன்’ என்னும் எழுத்து 
 மன்னன்
 
  பின்னால்  
 	மேலே நாம் பார்த்த உடன்நிலை மெய்ம்மயக்கங்களில் ஒரு மெய் 
 எழுத்திற்கு அடுத்து அதே மெய்எழுத்து வந்துள்ளது. ஆனால் அந்த மெய் எழுத்துத் தனித்து வராமல் உயிர்மெய் எழுத்தின் உருவில் வந்துள்ளது. க்+அ = க என்பது போல் இடம்பெற்றுள்ளது.	 
 |