6.4 ஈர்ஒற்று மயக்கம்
ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து வேறொரு மெய்எழுத்து, உயிர்மெய் எழுத்துடன் வராமல் தனி மெய் எழுத்தாகவும் வருவது உண்டு. அவ்வாறு இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருவதை ஈர்ஒற்று மயக்கம் என்று கூறுவர்.
எடுத்துக்காட்டு: புகழ்ச்சி
இதில் ‘ழ்’ என்னும் மெய் எழுத்துக்குப் பின்
‘ச்’ என்ற மெய் எழுத்து வந்துள்ளது. இந்த ‘ச்’ என்னும் எழுத்து உயிர்மெய்யுடன் சேர்ந்து வராமல் தனி மெய் எழுத்தாகவே வந்துள்ளது.
ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள்:
ய், ர், ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து வரும்.
• ‘ய்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்
நாய்க்கால் |
- க் |
வேய்ங்குழல் |
- ங் |
காய்ச்சல் |
- ச் |
மெய்ஞ்ஞானம் |
- ஞ் |
மேய்த்தல் |
- த் |
பாய்ந்தது |
- ந் |
வாய்ப்பு |
- ப் |
செய்ம்மன (செய்யுளில் மட்டுமே வரும்) |
• ‘ர்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்
பார்க்கிறாள் | - க் |
ஆர்ங்கோடு | - (ஆத்திமரக்கிளை) - ங் |
உயர்ச்சி | - ச் |
ஞ் | - வழக்கத்தில் இல்லை. |
பார்த்தல் | - த் |
ஊர்ந்து | - ந் |
தீர்ப்பு | - ப் |
ம் | - வழக்கத்தில் இல்லை. |
• ‘ழ்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று வருதல்
வாழ்க்கை | - க் |
பாழ்ங்கிணறு | - ங் |
வீழ்ச்சி | - ச் |
ஞ் | - வழக்கத்தில் இல்லை |
வாழ்த்து | - த் |
வாழ்ந்து | - ந் |
தாழ்ப்பாள் | - ப் |
ம் | - வழக்கத்தில் இல்லை. |
|