4.6 ஏகார, ஓகார ஈற்றுச் சிறப்பு விதி

ஏகாரமும் ஓகாரமும் இடைச்சொற்கள் ஆகும். இவை பெரும்பாலும் பெயர்ச்சொற்களுக்கு இறுதியில் வரும்.

ஏ, ஓ என்னும் இடைச்சொற்களுக்கு முன்னர் வரும் வல்லினம் பொதுவிதிப்படி மிகாமல் இயல்பாகும்.

இடைச்சொல் ஏ ஓ முன்வரின் இயல்பே.       (நன்னூல், 201)

சான்று :

அவனே + கண்டான் = அவனே கண்டான்
அவனோ + கண்டான் = அவனோ கண்டான்?