1.1 காப்பியங்கள் ஐந்து-ஒரு
விளக்கம் |
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி,
குண்டலகேசி என்பன ஐந்து பெருங்காப்பியங்கள். இவற்றை
இயற்றியவர்கள் யார் தெரியுமா?
நூலின் பெயர் |
ஆசிரியர் |
சிலப்பதிகாரம் |
இளங்கோவடிகள் |
மணிமேகலை |
சீத்தலைச் சாத்தனார் |
சீவகசிந்தாமணி |
திருத்தக்கதேவர் |
வளையாபதி |
ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை |
குண்டலகேசி |
நாதகுத்தனார் |
இவற்றில் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி
ஆகிய
மூன்றும் சமண சமயத்தைச் சார்ந்தவை. எஞ்சிய இரண்டும்
பௌத்த சமயத்துக்கு உரியவை.
இந்தக் காப்பியங்கள் கதைகளின்
வழியாக மக்களுக்குச் சில நீதிகளைச் சொல்லத் தோன்றியவை.
இவை தோன்றிய காலம் வருமாறு :
சிலப்பதிகாரம் |
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
|
மணிமேகலை |
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
|
சீவகசிந்தாமணி |
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
|
வளையாபதி |
கி.பி. பத்தாம் நூற்றாண்டு
|
குண்டலகேசி |
கி.பி. பத்தாம் நூற்றாண்டு
|
இந்த ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம்,
மணிமேகலை,
சிந்தாமணி ஆகிய மூன்றும் முழுவதுமாகக் கிடைக்கின்றன.
வளையாபதியில் 72 செய்யுட்களும்,
குண்டலகேசியில் 224
செய்யுட்களுமே கிடைக்கின்றன.
|