2.0 பாட முன்னுரை
கலை என்பது பண்பாட்டின் வளர்ச்சியில் தோன்றுவது.
கலையின் அடிப்படை, அழகு உணர்வே. எனவே கலைகளை
அழகுக்கலைகள் என்று கூறினர். மனிதன் காட்டில் வாழ்ந்த
காலத்திலேயே அவனிடம் பண்பாடு முளைவிடத் தொடங்கிவிட்டது. அதனால்தான் இலைதழைகளால் உடை
உடுத்தக் கற்றுக் கொண்டான்; குகைகளில் ஓவியங்கள் வரையத்
தொடங்கினான்; கற்களால் செய்யும் கருவிகளில்கூட அழகு
உணர்வு புலப்படத் தொழில் திறம் காட்டினான். மண்ணால்
செய்த பாண்டங்களிலும் அழகிய உருவம் படைக்கச் செய்தான்.
பண்டைக்காலத்திலிருந்தே கலைகள் படிப்படியாக வளர்ந்தன;
கூடவே அவை மனிதனின் பண்பாட்டையும் வளர்த்தன.
|