2.5 கட்டடக்கலை

c03120ad.gif (1750 bytes)E

யானைகளின் மீது உயர்த்திய கொடிகளோடு நுழையக்கூடிய பெரிய வாயில்கள், குன்றைக் குடைந்து சமைத்ததுபோல் அகன்ற இடைவெளி கொண்ட முகப்புகள், சுதையால் வெள்ளியைப் போல் பளபளப்பாகச் சாந்துபூசிக் கண்ணாடிபோல் இழைக்கப் பெற்ற சுவர்கள், கொடியும் மலரும் இயற்கைக் காட்சிகளும் என வீடுதோறும் வரையப் பெற்ற இனிய ஓவியங்கள் என்றவாறு அமைந்த பெரிய வீடுகளைப் பழங்காலத்தில் நகர் என்றே குறித்தனர். பண்டைக்காலத்தில் கட்டப்பெற்ற மாபெரும் அரண்மனைகள் எல்லாம் அழிந்து விட்டன. ஆனால் கோயில்கள் பல அழியாமல் இன்னும் தமிழர் கட்டடக்கலைப் பெருமையின் மாண்பைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

2.5.1 கோயிற் கட்டடக்கலை

Mamallapuram

செங்கணான் என்ற சோழ வேந்தன் பல்லவர் காலத்திற்கு முன்பே, அதாவது கி.பி. 600க்கு முன்னர் சிவபெருமானுக்கு எழுபத்தெட்டுக் கோயில்களைக் கட்டினான் என்று அறியப்படுகிறது. பல்லவர்கள் காலத்தில் மலைகளைக் குடைந்து செய்த குகைக் கோயில்களும், கருங்கற்களை அடுக்கிச் செய்த கற்கோயில்களும் சமைக்கப் பெற்றன. திருநாவுக்கரசர் எனும் சைவக்குரவர் தம் காலத்தில் இருந்த கோயிற் கட்டட வகைகளைப் பற்றிக் கூறுகிறார்.

அவையாவன:

  • கரக்கோயில்

  • கொகுடிக்கோயில்

  • ஞாழற் கோயில்

  • இளங்கோயில்

  • மணிக்கோயில்

  • ஆலக்கோயில்

கோயிற்
கட்டட
வகை

சிறப்பு

எடுத்துக்காட்டு
கரக்
கோயில்
Karakoil வட்டமான
விமானம
திருக்கடம்பூர்
கொகுடிக்
கோயில்

வட்ட விமானத்தின் மேல்
கர்ண (தோடு வடிவக்) கூடம்

திருக்கருப்பறியலூர்
ஞாழற்
கோயில்
ஞாழல் (ஒருவகை மரம்)
போன்று (குடை விரிந்த) அமைப்பு உடையது
(இன்று இல்லை)
இளங்
கோயில்
Ilankoil பெருங்கோயிலைப்
பழுதுபார்க்கும்
பொழுது தெய்வ
உருவைத்
தற்காலிகமாக
வைக்கும் கோயில்
கடம்பூர்
மணிக்
கோயில்
Manikoil ஆறு அல்லது
எட்டுப்
பட்டைகளைச்
சிகரத்தில்
கொண்டது
சீனிவாசநல்லூர்
ஆலக்
கோயில்
Alakoil மிக அகன்று
தாழ்ந்த மேற்
கூரையுடைய
கோயில்
(இன்று இல்லை)

கோயிற் கட்டட வகை.

வட்டமான விமானத்தை உடைய கோயில் கரக்கோயில் (திருக்கடம்பூர்) ஆகும். வட்டமான விமானத்தின் மேலே தோடு போன்ற அமைப்புடைய கர்ண கூடத்தைக் கொண்டது கொகுடிக் கோயில் (திருக்கருப்பறியலூர்) ஆகும். ஞாழல் என்பது அடர்ந்த மலர்கள் பூக்கும் ஒருமரம். இந்த மரம் போன்று குடை விரிந்த அமைப்புடையது ஞாழற் கோயில். இவ்வகைக் கோயில் இன்று இல்லை. இளங்கோயில் என்பது பெருங்கோயிலைப் பழுது பார்க்கும்போது தெய்வ உருவைத் தற்காலிகமாக வைக்கும் கோயில் ஆகும். இதனைப் பாலாலயம் என்றும் கூறுவர் (கடம்பூர்). மணிக் கோயில் என்பது ஆறு அல்லது எட்டுப் பட்டைகளைச் சிகரத்தில் கொண்டதாகும் (சீனிவாசநல்லூர்). ஆலக்கோயில் என்பது ஆலமரத்தின் கீழ் அமைந்தாற்போல அகன்று விரிந்த சிறப்புடைய கோயிலாகும். கோயிற் கட்டடக் கலையில் குறிப்பிடத்தக்கவை தூண்கள், மேற்கூரையின் உள்பகுதி, கோபுரம், தெய்வ உருவங்கள் ஆகியவை ஆகும்.

2.5.2 அரண்மனைகள்

கோட்டை கொத்தளங்கள், அகழிகள், கொலு மண்டபங்கள், யானை குதிரைக் கொட்டடிகள், அந்தப்புரங்கள் போன்றவற்றோடு கூடியது அரண்மனை. பண்டைக்காலத்து அரண்மனைகள் பலவும் அழிந்துவிட்டன. உறையூர், பூம்புகார், கருவூர், மதுரை, வஞ்சி ஆகிய நகரங்களிலிருந்த அரண்மனைகள் இன்று இல்லை.

Click here to Zoom
செஞ்சி

Click here to Zoom
நாயக்கர்
மகால்

இதோ, மூன்றில் ஒரு பகுதியாகக் குறுகி விட்ட திருமலை நாயக்கர் மகால், தஞ்சை மராட்டியர் கால அரண்மனை, செஞ்சி தேசிங்குராசனின் அரண்மனை ஆகியன சிதைந்த நிலையில் இன்றும் உள்ளன.

2.5.3 கட்டடக்கலை மாட்சி

Click here to Zoom
தஞ்சை
Click here to Zoom
திருவரங்கம்
Click here to Zoom
கழுகுமலை
Click here to Zoom
மதுரை

இராசராசசோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயில், நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் பல செய்யப் பெற்ற மதுரை மீனாட்சி கோயில், திருவரங்கத் திருக்கோயில், மாணிக்கவாசகர் பணி செய்த திருப்பெருந்துறைக் கோயில், கழுகுமலைக் குடைவரைக் கோயில்கள் ஆகியன தமிழர்களின் கட்டடக்கலை மாட்சியைச் சுட்டிக் காட்டி நிற்கின்றன. வாழும் வீட்டை உறுதி மிக்கதாகக் கட்டிக் கொள்வதில் பண்டைத்தமிழர் கவனம் செலுத்தவில்லை. வழிபடும் திருக்கோயில்கள் காலத்தை வென்று நிற்கும்படி கட்டினர். எகிப்தின் பிரமிடுகள், கிரேக்கச் சிலைகள், உரோமானிய கலைக் கூடங்கள், பைசா நகர்க் கோபுரம், ஆக்ராவின் தாஜ்மகால் ஆகியவற்றுக்கு நிகராகத் தமிழகக் கோயிற் கட்டடக் கலை விளங்குவதை இன்றும் காணலாம்.