1.7 தொகுப்புரை இசுலாமிய மரபினரிடமிருந்து, நாயக்கர், தமிழக
ஆட்சியைக்
கைப்பற்றினர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட
இவர்களின் ஆட்சியில் தமிழ் வளரவில்லை. எனினும்,
தமிழரும் அயலவரும் பூசலின்றி வாழ்ந்தனர். கலைகள்
செழித்தன. சமயங்கள் சமரச உணர்வு பூண்டிருந்தன.
கோயில்கள் சிறப்புப் பெற்றன. பொதுநிலையில் நாயக்கர்
காலத்தில் தமிழர் பண்பாடு
நலிவு அடையவில்லை எனலாம்.
|