3.5 தொகுப்புரை

ஐரோப்பியர் வரவு தமிழ்நாட்டின் புறக்கோலத்தை மாற்றியது. ஆயினும், தமிழகத்தின் அகப்பண்பாட்டை ஐரோப்பிய நாகரிகம் மாற்றிவிடவில்லை. உணவு உடையில் எளிமை, பற்று மிகுந்த இல்லறம், மனிதநேயம், வலிய வந்து நன்மை செய்யும் மனித உறவு ஆகியன தமிழர் பண்பாட்டுக் கூறுகளாக அமைந்து அயலவரைக் கவர்ந்தன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. போப்பையரைக் கவர்ந்த நெறிகள் யாவை?

2. புதிய இலக்கிய வடிவங்கள் சித்திரித்த தமிழர் வாழ்வியற் பண்புகள் யாவை?

3. வ.உ.சி. அந்நிய ஆட்சியை எதிர்க்க என்ன செய்தார்?

4. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய போராட்டத்தில் பங்கு பெற்ற தமிழ்ப் பெண்மணி யார்?