பல ஊர்களில்
வணிகர்கள் கூட்டம் கூடியதைப் பல
கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அக்கூட்டத்தில் கூடியவர்கள் பற்றிய
விபரத்தைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு மாவட்டம்
சர்க்கார் பெரியபாளையத்திலும், சிவகங்கை
மாவட்டம்
பிரான்மலையிலும் கி.பி. 13ஆம் நூற்றாண்டில்
பெரும்
வணிகக் கூட்டங்கள் கூடியுள்ளன. அவர்களைப் பின்வருமாறு
கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
(1) நான்கு திசை சமஸ்தலோக பதினெண்
விஷயத்தார்,
(2) ஏறுசாத்து, இறங்கு சாத்து விளங்கு
திசையாயிரத்து
ஐநூற்றுவர்,
(3) நாடு, நகரங்களில் திசைவிளங்கு
திசையாயிரத்து ஐநூற்றுவர்,
(4) கேரளசிங்க வளநாட்டு அருவிமாநகரமான
குலசேகரபட்டினத்து நகரத்தார்
(5) திருக்கோட்டியூர் மணியம்பலத்து
நகரத்தார்.
(6) ஐம்பொழில் வளநாட்டு கல்வாயல்
நாட்டு
சுந்தரபாண்டியபுரத்து நகரத்தார்
(7) மண்டலிகள் கம்மரப் பெருந்தெரு
நகரத்தார்
(8) கருவூர், கண்ணபுரம், பட்டாலி,
தலையூர், இராசராசபுரம்,
கீரனூர் உள்ளிட்ட கொங்கு நகரத்தார்
ஆகியவர்களைப்
பிரான்மலைக் கல்வெட்டுக் கூறுகிறது.
|