6.3 பாடல்களின் வடிவ ஒழுங்குகள் | |||
இப்பாடப் பகுதிப் பாடல்களில் அமைந்துள்ள வடிவ ஒழுங்குகளை எடுத்துக் காட்டுகளுடன் இங்குக் காணலாம். நக்கீரனாரின் கேளிர்வாழியோ (குறுந்தொகை-280) என்னும் பாடல் ஆசிரியப்பாவின் ஓசை ஒழுங்கு, எதுகை முரண் போன்ற தொடை அழகுகள் சிறப்பாக அமைந்துள்ள பாடல் ஆகும்.
கேளிர் - கேளிர் ; நெஞ்சு - அஞ்சில் - எனவரும் எதுகை அழகுகளும், பெருந்தோள் - குறுமகள் - சிறுமெல்லாகம் எனவும், ஒருநாள் - அரைநாள் எனவும் வரும் முரண்தொடை அழகுகளும் பாடலின் வடிவச் சிறப்புக்குக் காரணமாகின்றன. கயத்தூர் கிழார் பாடலில் (குறுந்தொகை-354) பாடலின் பொருளமைப்பைக் கூர்மைப்படுத்தும் வண்ணம் பாடலின் வடிவம் அமைந்துள்ளது. பாடலின் பொருளமைப்பு இவ்வாறு அமைந்திருக்க வேண்டும்.
என்பதை நீங்கள் கவனிக்க முடியும். மாற்றப்பட்ட வரிசைப்படி:
இவ்வாறு கருத்துகளை, எண்ணங்களை அவற்றின் தர்க்க வரிசை முறையை மாற்றி்த் தருவதன் மூலம் கவிதைப் பொருளைச் சிறப்பாகத் தரும் வடிவமைப்பு முறையை இப்பாடலில் உள்ளது போலவே பல பாடல்களிலும் காணமுடியும். |