கற்பு வாழ்க்கையில் தலைவன் மேற்கொள்ளும்
புணர்ச்சி (கூடி மகிழும்) வகைகள் சில உள்ளன. அவையாவன :-
குரவரில் புணர்ச்சி
பெற்றோர் முன்நின்று திருமணம் செய்விக்க அதன் மூலம் தலைவியோடு கூடி மகிழுதல்.
வாயிலிற் கூட்டம்
வாயில்களாக வருபவர் மூலம், தலைவியின் ஊடல்
தீர்த்து, கூடி மகிழுதல்.
மறையிற் புணர்ச்சி
காதல் பரத்தையர் எனப்படும் மகளிரோடு, கற்புக் காலத்தும் மனைவி அறியாது தலைவன் கூடி மகிழுதல்.
மன்றல் புணர்ச்சி (மண உறவு மூலம் மகிழ்தல்)
காமக்கிழத்தியர், பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தியர் முதலானவருடன் உரிமையும், மண உறவும்
கொண்டு தலைவன் கூடி மகிழுதல்.
|