2.6 மருட்பாவின் பொது இலக்கணம்

     மருள்+பா = மருட்பா. மருள் = மயக்கம். மயக்கம் என்பது ஒன்றோடு மற்றொன்று கலந்து வருவதைக் குறிக்கும்.வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து அமையும் பா,மருட்பா.முதலில் வெண்பா அடிகளும் பின்னர் ஆசிரியப்பா அடிகளும் இணைந்து வரும். இப்பாவுக்கு அடிவரையறை சொல்லப்படவில்லை. எனினும் உரையாசிரியர்கள் மருட்பாவுக்குக் காட்டும் எடுத்துக்காட்டுப் பாடல்களை வைத்துப் பார்க்கும் போது, முதலில் வரும் வெண்பா அடிகள் குறைந்த அளவு இரண்டடி வரும் ; அதிக அளவுக்கு வரம்பு இல்லை ; இறுதியில் ஆசிரியப்பா அடிகள் இரண்டடியாக வரும் எனப் புரிந்து கொள்ளலாம்.