2.2 செய்யுள் வகை செய்யுள் அமையும் முறையைச் செய்யுள் வகை என்னும் பகுதி எடுத்துரைக்கின்றது. செய்யுள் அமைப்பை அறிந்து கொண்ட பிறகே, அணியிலக்கணம் பற்றிய கருத்துப் பயன் தரும் ஆதலின் செய்யுள் வகை முதலில் கூறப்படுகின்றது. எவ்வகைப்பட்ட பாடல்களும் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய நான்கு வகைகளுள் ஒன்றாக அமையும். இவற்றுள், முத்தகம். குளகம் ஆகியன வடமொழிப் பெயர்கள் என்பர். தொகைநிலை, தொடர்நிலை ஆகியன தமிழ்ப் பெயர்களாகும்.
(தெரிவுற = விளக்கமாக
|