|
4.1 செய்யுள்நெறி
நெறி என்பது சொல்லமைப்பு
வகையினைக் குறிக்கும்.
செய்யுளில் அமையும் சொல்லமைப்பு வகைகளை
எடுத்துரைப்பது
செய்யுள்நெறி ஆகும்.
செய்யுள்நெறி கீழ்க்காணும்
கூறுகளைக் கொண்டுள்ளது.
| 1) |
உயிரெழுத்து (குறில், நெடில்) அமையும் நிலை.
|
| 2) |
மெய்யெழுத்தின் வகைகள் (வல்லினம், மெல்லினம்,
இடையினம்) தனித்து வருதலும் கலந்து வருதலும். |
| 3) |
பொருள்தெளிவுக்கு உரிய சொற்கள் இடம் பெறுதலும்
வருவித்தலும். |
| 4) |
வெளிப்படைப் பொருள் அமைதலும் குறிப்புப்
பொருள் அமைதலும். |
| 5) |
ஓசை நலம் குன்றாமை. |
| 6) |
சொல்நலம், பொருள்நலம் அமைதல். |
| 7) |
கருத்து, வருணனைகளின் நம்பகத்தன்மை. |
| 8) |
வேற்றுமை உருபுகள் மறைந்து வரும் நிலை. |
| 9) |
ஒன்றன் இயல்பை வேறொன்றில் ஏற்றி உரைத்தல். |
|