4.2 செய்யுள்நெறி - வகைகள் செய்யுள்நெறி இருவகைப்படும். அவை : (1) வைதருப்ப நெறி, (2) கௌட நெறி இதனைத் தண்டியலங்காரம் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறது.
(மெய் = உண்மை விதர்ப்ப நாட்டார் ஆதரித்த நெறி ஆதலால் வைதருப்பநெறி எனப்பட்டது. இது எளிமையாகவும் இயல்பாகவும் அமையக் கூடியது. பத்துக் குணங்களைத் தன்னிடத்துக் கொண்டது. அவை, 01) செறிவு ஆகியனவாகும்.
(உதாரம் = அதிசயம் கௌடரால் மேற்கொள்ளப்பட்ட நெறி, கௌட நெறியாகும். கௌடர் என்னும் பெயர், கௌட நாட்டினர் என ஒரு நாட்டினரைக் குறிப்பதும் ஆகலாம் ; தனி ஒருவருக்கு அமைந்த இடுகுறிப் பெயரும் ஆகலாம். இது குறித்து உரைநூல்களில் தெளிவான விளக்கம் காணப்படவில்லை. வைதருப்ப நெறியை மறுத்து எழுந்தது கௌட நெறியாகும். இதுவும் கீழ்க்காணும் பத்துக் குணங்களை உடையது : 01) செறிவு வைதருப்பர் தம் செறிவு முதலான இப்பத்து குணங்களுள் சிலவற்றைத் தழுவியும், சிலவற்றை மறுத்தும் அமைவது கௌட நெறியாகும்.
(கூடாது = பொருந்தாது பத்தொடும் கூடாது என்பதில்
இடம் பெறும் உம்மை
முற்றும்மையாக அமையாமல் 'சிலவற்றொடு மட்டும்
கூடி
வரும்' என்னும் எச்சப் பொருள் தருவதும் உண்டு. |