4.4 வைதருப்பம் - தெளிவு பாடலின் பொருள் நன்கு புலப்படுமாறு அமைவது தெளிவு எனப்படும். செய்யுளில் திரிபுச் சொற்கள், கடினமான புணர்ச்சி விதிகள், குறிப்புப்பொருள்கள் ஆகியன அமையாமல், இயற்சொற்களாலும் எளிமையான சொற்புணர்ச்சிகளாலும் அமைவது ‘தெளிவு’ என்னும் குணத்தில் அடங்கும். தெளிவு என்பது வெளிப்படை என்னும் பொருள் உடையது.
(இன்னா = துன்பம் ஒருவன் பிறருக்குத் துன்பம் செய்யின் அத்துன்பம் அடுத்துவரும் காலத்தில் அவன் அனுபவிக்க வேண்டியதாகத் தானே அவனைச் சென்று அடையும்.
(வெம்புகரி = மதயானை கொம்பு உள்ள விலங்குகளை விட்டு ஐந்துமுழம் தூரமும், குதிரையை விட்டுப் பத்து முழம் தூரமும், மதம் மிகுந்த யானையை விட்டு ஆயிரம் முழம் தூரமும் விலகியிருக்க வேண்டும். ஆனால் தீயவர்களின் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் நீங்கி நிற்பதே நல்லதாகும் என்பது இதன் பொருள். இவ்வாறு வருவனவே தெளிவு என்னும் குணத்தனவாகும். கௌடநெறி சொல்லாற்றல் மிக்கதாகத் தெளிவினைச் சுட்டி நிற்கும்.
|