D03134 செய்யுள்நெறி - வைதருப்பம் (முதற்பகுதி)

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

செய்யுள்நெறி என்பதற்கான விளக்கம் அளிக்கிறது. செய்யுள் நெறியின் வகைகளை எடுத்துரைக்கிறது. வைதருப்ப நெறியின் முதல் ஐந்து குணங்களை விவரிக்கின்றது. செய்யுளில் இடம்பெறும் சொல்லின்பம், பொருளின்பம் பற்றி விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

செய்யுள்நெறி என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
செய்யுள்நெறியின் வகைகளை அறிந்து கொள்ளலாம்.
செய்யுளின் ஓசை வேறுபாடுகளை அறியலாம்.
செய்யுளில் அமையும் பொருள் புலப்பாட்டுத் தன்மையை உணரலாம்.
வைதருப்ப நெறி பற்றித் தெரிந்து கொள்ளலாம்.