தன் மதிப்பீடு : விடைகள் - II |
||
7. |
ஏக தேச உருவக அணி என்றால் என்ன? ஒரு சான்று தந்து விளக்குக. | |
ஒரு பாடலில் உருவகம் செய்யும் இருபொருள்களில் ஒரு பொருளை உருவகம் செய்து விட்டு அதனோடு
தொடர்புடைய மற்றொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏக தேச உருவகம் ஆகும். |
||
எடுத்துக்காட்டு | ||
''பிறவிப் பெருங்கடல் நீந்துவர்;
நீந்தார் இறைவன் அடிசேரா தார்.'' (குறள். 10) |
||
இக்குறளில், பிறவியைக் கடலாக உருவகம் செய்து விட்டு அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளாகிய இறைவன் திருவடியைத் தெப்பமாக உருவகம் செய்யாது விட்டமையால் இது ஏக தேச உருவகம் ஆயிற்று. |