|  
  5.1 துணை வினை - ஒரு விளக்கம்      வினைச்சொற்கள் 
        தொழில் அல்லது செயலைக் காட்டும். இவை காலம் காட்டும் இடைநிலைகளையும் பால், 
        எண் காட்டும் விகுதிகளையும் பெற்றுவரும். ஒவ்வொரு வினைச்சொல்லுக்கும் தனித்தனியே 
         சொற்பொருள்  (Lexical 
        meaning) உண்டு. சான்றாகப்  
        பார் என்னும் வினைச்சொல் ‘பார்த்தல்’ அல்லது ‘காணுதல்’ என்ற தனிப்பொருள் 
        உடையது. இது போன்றே இரு, 
        பாடு, ஆடு, செய், அழு, தள்ளு போன்ற வினைச்சொற்களும் தமக்கென்று 
        தனித்தனியே பொருள் உடையன. இத்தகைய வினைச்சொற்களுள் சில, வேறு வினைச்சொற்களுடன் 
        இணைந்து வருதலும் உண்டு. அவ்வாறு இணைந்து வரும்பொழுது, அவை தமக்குரிய தனிப்பொருளை 
        இழந்து, தாம் சேர்ந்து வரும் வினைச்சொற்களுக்குப் புதிய பொருளைத் தருவனவாய் 
        அமைகின்றன. இத்தகு புதிய     பொருளை மொழியியலார்  
        இலக்கணப்பொருள்   
        (Grammatical meaning) என்று குறிப்பிடுகின்றனர்.     
        இவ்வாறு     தம்பொருளை இழந்து, இலக்கணப்பொருளைத்     
        தருகின்ற     நிலையில்     வரும் 
        வினைச்சொற்களையே துணைவினைகள் 
        (Auxillary verbs) 
        என்று மொழியியலார் கூறுகின்றனர். சான்று : இராமன் வீட்டில் இருந்தான்      
        இராமனிடம் பணம் இருக்கிறது சான்று : இராமன் வந்திருந்தான் இச்சொற்றொடரில் இரு என்பது வா என்ற வினையடியிலிருந்து தோன்றிய வந்து என்ற வினையெச்சத்தோடு சேர்ந்து வரும்பொழுது, ‘வந்து அதன் பின்பு இருந்தான்’ என்ற தன் பொருளில் வழங்காமல், வந்தான் என்ற பொருளில் வழங்குகிறது. எனினும் இராமன் வந்த செயல் முடிவைத் தெளிவாக அல்லது உறுதியாக உணர்த்திட, வந்தான் என்ற சொல்லைக் காட்டிலும் வந்திருந்தான் என்ற சொல்லே துணைபுரிகிறது. இதற்குக் காரணம் வந்து என்பதோடு சேர்ந்து வரும் இரு என்ற வினையே ஆகும். இதுபோல ஒரு வினைக்குத் துணையாக நின்று, அவ்வினை உணர்த்தும் செயல் அல்லது தொழிலை விளக்கவோ, சிறப்பிக்கவோ உதவுவதால் இதனைத் துணைவினை என்று மொழியியலார் குறிப்பிட்டனர். இந்நிலையில் துணைவினைகளோடு சேர்ந்து வரும் வினைகளைத் (வா-வந்து) தலைமை வினை (Main verb) என்று மொழியியலார் கூறினர். வந்திருந்தான் என்பது போன்ற இரு வினைச்சொற்கள் சேர்ந்து வருவதைக் கூட்டுவினை (Compound verb) என்றும் மொழியியலார் குறிப்பிடுகின்றனர். கூட்டுவினையின் அமைப்புப் பின்வருமாறு அமையும்.  தலைமை 
        வினை + துணை வினை = கூட்டுவினை   வந்து + இருந்தான் = வந்திருந்தான் தமிழில் உள்ள இத்தகைய கூட்டுவினைகளை ஆராய்ந்து பார்த்தால், அவற்றில் முதற்கண் வரும் தலைமை வினைகள் எல்லாம் வினையெச்ச வடிவில் இருக்கும். அவை பெரும்பாலும் செய்து, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களாக இருக்கக் காணலாம். அவ்வினையெச்சங்களோடு சேரும் துணைவினைகள் ஏவல் வடிவங்களாகவும் முற்று வடிவங்களாகவும் இருக்கும். சான்று : மோது : மோதிப் பார் (ஏவல் வடிவம்) மோதிப் பார்த்தான் (முற்று வடிவம்) ஊது : உண் : 
               
        உண்ணச் செய்தான் (முற்று வடிவம்)  |