பீல்டு கோட்பாட்டுடன் தொடர்புடைய
இக்கருதுகோளை
இவ்விடத்தில் குறிப்பிடுவது
பொருத்தமான ஒன்றாகும்.
எண்ணத்தின் மீதான மொழியின் செல்வாக்கு (தாக்கம்) பற்றிய
கோட்பாடு இது.
எண்ணத்தின் மீது மொழி ஆதிக்கம்
செலுத்துகிறது என்பது
புதிய கருத்து அல்ல. இதைத்தான் ‘tyranny of words’ என்று
டிக்கன்ஸ் (Dickens) குறிப்பிடுகிறார். அவருக்கு முன்னரே பேகனும்
(Bacon)
“மொழியின் மீது மனம் ஆதிக்கம்
செலுத்துவதாக மனிதர்
நினைக்கின்றனர். ஆனால், நடப்பது என்ன? மனித மனங்களின்
(எண்ணங் களின்) மீது மொழி ஆதிக்கம் செலுத்துகிறது” என்கிறார்.
சபீர் - ஒர்ஃப் கருதுகோள்
அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க
அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. விரிவாக விவாதிக்கப்பட்டது.
பீல்டு கோட்பாட்டுடனான இதன் தொடர்பு குறிப்பிடத்தக்க அளவு
சிறப்புப் பெறும் என்பதில் ஐயமில்லை.
2.5.2
தூண்டல் - விளைவுக் கோட்பாடு (Stimulus -
Response theory)
உளவியல் அணுகுமுறையில் அமைந்த தூண்டல்
விளைவுக்
(துலங்கல்) கோட்பாடு (Stimulus-response theory) குறித்து இனி
ஆய்வோம்.
பொருள் (meaning) என்றால் என்ன?
எனும் கேள்விக்கு
நேரிடையாக விடை கூற முயன்ற மூன்று
கோட்பாடுகளில்
தூண்டல் விளைவுக் கோட்பாடும் ஒன்று. இதைத்
தூண்டல்
துலங்கல் கோட்பாடு என்றும் கூறலாம்.
இக்கோட்பாடானது இக்கால உளவியலில் பெரிதும் செல்வாக்குப்
பெற்று விளங்கியது. தத்துவம், மொழியியல் ஆகிய துறைகளிலும்
இது பின்பற்றப்பட்டது. புளூம்பீல்டு என்பார் இக்கோட்பாட்டின்
ஆசிரியர் ஆவார். Language
எனும் தமது நூலில்
இக்கோட்பாட்டினை அவர் விவரித்துள்ளார்.
பேசுபவர் எந்தச் சூழலில் பேசுகிறார், அப்பேச்சு கேட்பவரிடம்
என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பதை அடிப்படையாக
வைத்து ஆராய்ந்தால்தான் பொருள் என்பதற்கு
விளக்கம்
கிடைக்கும். பொதுவாக, பேசுபவரின் தூண்டலை
மையமாக
வைத்தே பொருள் என்பதற்கு விளக்கம் காண முடியும் என்கிறார்
புளூம்பீல்டு. இதை behaviourist view of meaning என்று அவர்
குறிப்பிடுகிறார்.
ஒருவரைப் பேசுமாறு (r-response) செய்த
தூண்டல் (s-
stimulus) இந்தப்பேச்சின் விளைவு
(R-response) இதை
ஆராய்ந்தால் பொருள் விளக்கிவிடும் - இதை,
S
r
........ S ----R என்று வரைந்து காட்டுகிறார்
புளூம்பீல்டு.
(S = Stimulus, r = response, s = speech, R = Result)
இக்கோட்பாட்டின்படி வெவ்வேறு விளைவுகளைக் காட்டும் ஒரு
கூறைப் பலபொருள் குறிக்கும் ஒரு கூறு எனல்
வேண்டும்.
இப்போது என்னுடன் வா என்ற வாக்கியம். ஒருவரிடம் எந்தவித
விளைவையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். அல்லது
பலவித
விளைவுகளை ஏற்படுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட விளைவுகளை
(அவ்வாக்கியத்தைக் கேட்டுவிட்டு சும்மா நிற்பது ஏன்
என்று
கேள்வி கேட்பது போன்றவை) ஏற்படுத்தும்
தன்மையால்
இவ்வாக்கியம் பலபொருள் குறிக்கும் ஒரு
வாக்கியம் எனக்
கருதப்பட வேண்டும். ஆனால், உண்மையில் அவ்வாறில்லை
அல்லவா? எனவே, தூண்டல். விளைவு இரண்டினையும் பொருளின்
பண்பாகக் கருத இயலாது.