6.5
பழங்காலத் தமிழ் - தற்காலப் பேச்சுவழக்கு ஆகிய மொழி என்றதும் எழுத்து வடிவத்துடன் இலக்கிய, இலக்கணங்களை உடையதுதான் என்ற எண்ணம் அனைவருக்கும் வரும். எழுத்து வடிவமில்லாது பேச்சுவழக்கில் மட்டும் பயின்று வரும் ஆயிரக்கணக்கான பழங்குடி மொழிகளும் நம் நாட்டில் உண்டு. ஒரு மொழி பரந்த பரப்பில் பேசப்படும் பொழுது அதில் வேறுபாடுகள் காணப்படுதல் இயற்கையாகும். கிளைமொழி (dialect) என்பது ஒரு குறிப்பிட்ட பேச்சுமொழியின் வகையைக் குறிப்பதாகும். பல தனி மனிதப் பேச்சு வழக்குகள் ஒரு கிளைமொழியையும், பல கிளைமொழிகள் சேர்ந்து ஒரு மொழியையும் உருவாக்குகின்றன. மொழிக்குடும்ப வரலாற்றிற்கு மொழியும், ஒரு மொழி வரலாற்றிற்குக் கிளைமொழி ஆய்வும் மிகவும் தேவையானவையாகக் கருதப்படுகின்றன. எனவே தான், தமிழ்மொழி வரலாற்றைப் பற்றி ஆராயும்பொழுது, தமிழ்க் கிளைமொழிகளின் வாழ்வையும் வளர்ச்சியையும் ஆராய வேண்டியுள்ளது. மக்கள் சிறுசிறு குழுக்களாக வாழும்போது மலை, ஆறு, கடல் போன்ற இயற்கையமைப்பில் பிரிக்கப்பட்டு அவர்களிடையே அதிகமான தொடர்பின்றி இருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இலங்கையும் இந்தியாவும் கடலால் பிரிக்கப்பட்டிருப்பதால், இவ்விரண்டு இடங்களிலும் பேசும் தமிழ்மொழியில் மிகுந்த வேறுபாட்டைக் காணலாம். செய்தித் தொடர்பில் குறுக்கீடுகள் (interferences) அதிகமானாலும் மொழியில் மாற்றங்கள் ஏற்படும். கிளைமொழியை வழங்கும் இடம் பற்றி வட்டாரக் கிளைமொழி என்றும், பேசுகின்ற மக்களின் சமூகநிலை பற்றிச் சமூகக் கிளைமொழி (social dialect) என்றும் கூறலாம். ஒரே மொழி வட்டாரத்திற்கு வட்டாரம், சாதிகளுக்கு சாதி, தொழிலுக்குத் தொழில் வேறுபட்டாலும் கூட, அவற்றிடையே ஒரு பொதுத் தன்மையைக் காண்கிறோம். எழுத்து மொழியுடன் பெரும்பாலும் ஒத்துச்செல்லும் பேச்சு வழக்கினைப் ‘பொதுப் பேச்சுமொழி’ (standard spoken language) அல்லது ‘பொதுக்கிளை மொழி’ (standard dialect) எனலாம். சங்க
காலத்திலேயே கிளைமொழிகள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் இலக்கியங்களிலும்
இலக்கணங்களிலும் காண்கிறோம். சங்ககாலப் புலவர்கள் பல்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்களாதலால்,
அவ்வட்டார வழக்கினையும் அவர்கள் தம் பாடல்களில் காண்கிறோம். புறநானூற்றில்,
‘நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை’ என்பதில் ‘ஓசை’ என்பது ‘பொரியல்’ என்ற பொருள்
வழங்குகிறது. கலித்தொகையில் ‘செரு’ என்ற சொல் ‘வயல்’ என்ற பொருளிலும் திருக்குறளில்
‘பெற்றம்’ என்ற சொல் ‘பசு’ என்ற பொருளிலும் தற்காலப் பேச்சு மொழியிலும் தொல்காப்பியர் காலச்சொற்கள் சிலவும், சங்ககாலச் சொற்கள் பலவும் வழக்கில் இருப்பினும், அந்தக் காலகட்டத்தில் உணர்த்தப்பட்ட பொருளில் இருந்து, தற்காலத்தில் உணர்த்தப்படும் பொருள் வேறுபட்டிருப்பதை நன்கு உணர முடிகின்றது. அத்தகைய மாறுபாட்டை உணர்த்த, கீழ்க்காணும் பட்டியல் பெருந்துணையாக விளங்கும். 1.
அரசு 2. அரசன், அரசாட்சி (சங்க இலக்கியம்)
2. அரசனின் ஆட்சி; rule or reign (of a
3. ஒரு துறையில் ‘இணையற்றவர்’ என்ற (2)
நெய்
2. நெய், வெண்ணெய், வெண்ணெயை உருக்கி
2. உருக்கிய வெண்ணெய்; clarified butter; ghee (3)
பழுது 2. குற்றம், தீங்கு (பழுதெண்ணும் - குறள், 639)
2. குற்றம் குறை; flaw; fault. செய்யும் முறை (4)
உழக்கு 2. மிதித்தல் (கலித்தொகை, 106)
3. கொன்று திரிதல் (சினஞ்சிறந்து களன் தற்காலப்பொருள்
: 1. (முன்பு வழக்கில் இருந்த முகத்தல்
2. மேற்சொன்ன அளவு குறிக்கப்பட்ட கலம்;
(5) கிழமை
2. நாலு தாக்குடைய தாளவகை, உரிமை. தற்காலப்பொருள்
: 1. வாரத்தின் ஏழு நாட்களையும் பொதுவாகக்
(6) இறுதி
தற்காலப்பொருள்
: 1. (தொடங்கப்பட்ட ஒன்று அடையும்) முடிவு;
2. மாற்ற முடியாதது; (of a decision, offer,
3. அதற்கு மேல் தொடராதது; கடைசி; last; (7)
இறை
2. உயரம், தமையன் இறந்துபடும் செய்கை, தற்காலப்பொருள்:
|