|
6.5 தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை பல்வேறு காலகட்டங்களில்
தமிழ்மொழியில் ஏற்பட்ட சொற்பொருள் மாற்றங்கள் குறித்துப் பல
செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப்பாடத்திலிருந்து என்னென்ன
செய்திகளைத் தெரிந்துகொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை
நினைவுபடுத்திப் பாருங்கள்.
- தமிழ்மொழி வரலாற்றில், சொற்பொருள் மாற்றம் எத்தகைய
இடத்தைப் பெற்றுள்ளது என்பதை அறிந்துகொண்டீர்கள்.
- பழந்தமிழ் நூல்களான தொல்காப்பியம், சங்க இலக்கியம்,
திருக்குறள் போன்ற நூல்களிடையே காணப்படும்
சொற்பொருள் மாற்றத்தை உணர்ந்துகொண்டீர்கள்.
- 17 - ஆம் நூற்றாண்டு இலக்கிய வழக்கிலும் பழந்தமிழ்ச்
சொற்கள் இடம்பெற்றிருப்பினும் அச்சொல்லுக்குரிய
பொருள்கள்
மாறியுள்ளமையை உணர்ந்துகொள்ள முடிந்தது.
- தொல்காப்பியக் காலம் முதல் தற்காலம் வரை ஒரு சொல்
எத்தகைய பொருள் மாற்றங்களை எல்லாம் அடைந்து
வந்துள்ளது என்பதை நன்றாகப் புரிந்துகொண்டீர்கள்.
- தற்காலப் பேச்சுவழக்கிலும் எவ்வாறு பழந்தமிழ்ச் சொற்கள்
தம் மூலப்பொருளில் இருந்து வெவ்வேறு பொருள்மாற்றம்
அடைந்துள்ளன என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II
|
1.
|
‘கழகம்’ என்ற சொல் அடைந்த உயர்பொருட்பேறு
யாது? |
|
2.
|
‘நுதல்’ என்ற சொல்லினது பொருள் மாற்றம்
அடைந்ததா? காரணம் கூறுக. |
|
3.
|
‘கிளை’ என்ற சொல் பழந்தமிழ் இனத்தைக் குறிக்க,
தற்போது எதைக் குறிக்கிறது? |
|
4.
|
பட்டி, பழுது - இவ்விரு சொற்கள் பழந்தமிழில்
எப்பொருளில் வழங்கி வந்தன? |
|
|