6.5 தொகுப்புரை

     நண்பர்களே! இதுவரை பல்வேறு     காலகட்டங்களில் தமிழ்மொழியில் ஏற்பட்ட சொற்பொருள் மாற்றங்கள் குறித்துப் பல செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப்பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளைத் தெரிந்துகொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

  • தமிழ்மொழி வரலாற்றில், சொற்பொருள் மாற்றம் எத்தகைய இடத்தைப் பெற்றுள்ளது என்பதை அறிந்துகொண்டீர்கள்.
  • பழந்தமிழ் நூல்களான தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் போன்ற     நூல்களிடையே     காணப்படும் சொற்பொருள் மாற்றத்தை உணர்ந்துகொண்டீர்கள்.
  • 17 - ஆம் நூற்றாண்டு இலக்கிய வழக்கிலும் பழந்தமிழ்ச் சொற்கள்     இடம்பெற்றிருப்பினும் அச்சொல்லுக்குரிய பொருள்கள் மாறியுள்ளமையை உணர்ந்துகொள்ள முடிந்தது.
  • தொல்காப்பியக் காலம் முதல் தற்காலம் வரை ஒரு சொல் எத்தகைய பொருள் மாற்றங்களை எல்லாம் அடைந்து வந்துள்ளது என்பதை நன்றாகப் புரிந்துகொண்டீர்கள்.
  • தற்காலப் பேச்சுவழக்கிலும் எவ்வாறு பழந்தமிழ்ச் சொற்கள் தம் மூலப்பொருளில் இருந்து வெவ்வேறு பொருள்மாற்றம் அடைந்துள்ளன என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
‘கழகம்’ என்ற சொல் அடைந்த உயர்பொருட்பேறு யாது?
2.
‘நுதல்’ என்ற சொல்லினது பொருள் மாற்றம் அடைந்ததா? காரணம் கூறுக.
3.
‘கிளை’ என்ற சொல் பழந்தமிழ் இனத்தைக் குறிக்க, தற்போது எதைக் குறிக்கிறது?
4.
பட்டி, பழுது - இவ்விரு சொற்கள் பழந்தமிழில் எப்பொருளில் வழங்கி வந்தன?