2.0 பாட முன்னுரை
திறனாய்வின் பொதுவான விளக்கத்தையும் அதன்
அறிமுகத்தையும் சென்ற பாடத்தில் பார்த்தோம். இப்போது
திறனாய்வாளன் யார்? அவனுடைய பண்புகள் என்ன என்று
பார்க்கப் போகிறோம். சரியான அல்லது ஒரு நல்ல திறனாய்வு
அமைய வேண்டுமானால், திறனாய்வாளன் அதற்கேற்பப்
பொருத்தமுற அமைகிறான். சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு
நல்லார் கிடைத்தது போல.
எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய
நிலனே என்று அவ்வையார் சொன்னது போல, எவ்வழி
திறனாளி, அவ்வழி நல்லை வாழிய திறனாய்வே.
|