திறனாய்வுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு, எந்த
முனையில் அல்லது எந்தக் கோணத்தில் இருக்கிறது?
திறனாய்வாளன், இலக்கியத்தைப் பார்க்கிறான்; அது சொல்லுகிற
வாழ்க்கையைப் பார்க்கிறான்; ஏன் அப்படிச்
சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறான். இவை பற்றி
வாசகனுக்கு விளக்குகிறான். திறனாய்வுக்கும் வாழ்க்கைக்கும்
உள்ள தொடர்பு இத்தகைய முனையில் இருக்கிறது.
|