இலக்கியம் சொல்லியிருக்கிற வாழ்க்கையைத்
திறனாய்வாளன் எவ்வாறு எடுத்துக் கொள்கிறான்?
இலக்கியம் சொல்லும் வாழ்க்கை, குறிப்பிட்ட காலம், இடம்
ஆகிய தளங்கள் கொண்டது. வாழ்க்கைச் சித்திரம், ஒரு கண
நேரத்துச் சித்திரமாக இருந்தாலும், அது கடந்த காலத்தின் ஒரு
தொடர்ச்சியேயாகும்; அதுபோல, வருங்காலத்தின் ஒரு முன்கூறு
ஆகும். திறனாய்வு, இலக்கியம் சொல்லியிருக்கிற வாழ்க்கையை
இவ்வாறு தான் எடுத்துக் கொள்கிறான்.
|