மொழித்திறன், இலக்கியத்திற்கு முக்கியமானது -
எவ்வாறு?
இலக்கியத்திற்கு உருவம் தருவது, மொழி. அதனை
முறையாகவும் திறன்படவும் கையாளுகிற போதுதான்,
சொல்லுகிற செய்தி, முறையாகவும் சிறப்பாகவும்
வெளிப்படுகிறது. மொழியே சிந்தனையின் கருவி.
மொழியை முறையற்றுக் கையாளுவது, முறையற்றுச்
சிந்திப்பதாகவே முடியும். மொழித்திறன், இவ்வாறு
முக்கியமானதாக உள்ளது.
|