5.6 தொகுப்புரை
• |
கலையின் நோக்கம் எத்தகையதாக இருக்கிறது என்பதனைச்
சார்ந்து கலைப்படைப்பினுடைய பண்பும் அமையக் கூடும். எனவே,
கலை இலக்கியத்தின் நோக்கத்தை அறிவதும் அது பற்றிய ஓர் அணுகுமுறையைப்
பெற்றிருப்பதும் இலக்கியத் திறனாய்வுக்கு அவசியமாகும். |
• |
கலை கலைக்காகவே என்ற கொள்கை, ஒரு சாராரிடம் உண்டு. கலையில்
அதன் அழகையும் அது தரும் ரசனை அனுபவத்தையும் மட்டுமே பார்க்க
வேண்டும் ; பிறவற்றைப் பார்க்கக் கூடாது என்று இக்கொள்கை கூறுகிறது. |
• |
இதற்கு மாறாக நீதி நெறிகளையும், அரசியல், சமயம் போன்றவற்றையும்
பிரச்சாரம் செய்வதற்குத் தானே கலை வடிவம் என்று கருதுகிற கருத்தும்
உண்டு. இது, அழகையும் நேர்த்தியையும் புறந்தள்ளி மறுக்கிறது. |
• |
கலை, வாழ்க்கைக்காகவே என்ற கொள்கையே பரவலாகப் பலராலும்
ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கலை முக்கியமாக இலக்கியக்கலை,
வாழ்க்கையைச் சித்திரிக்கும் நோக்கம் கொண்டது என்றும் மனித
வாழ்க்கை பற்றிய மன எழுச்சிகளுக்கு அது துணையாகவும் உந்துதலாகவும்
இருக்கிறதென்றும் இக்கொள்கை கூறுகிறது. |
• |
கலை, வாழ்க்கைக்காகவே என்ற கொள்கையே தமிழ் மரபில் வேரூன்றியுள்ளது.
தொல்காப்பியம், சிலம்பு முதல் பாரதியார் வரை இந்தக் கொள்கை
வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். |
• |
உருவமும் உள்ளடக்கமும் அதாவது கலையழகும் கலையின் நோக்கமும்
இரண்டற வேறுபாடின்றிக்
கலந்து வெளிப்படுவதே உயர்ந்த
கலையாகும். கலை,
வாழ்க்கைக்காகவே எனும் கருத்து, இதனை முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.
|
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
|
1. |
‘கலை, கலைக்காகவே’ என்ற கொள்கை பற்றி
ஏ.சி.பிராட்லி கூறுவது யாது?
|
விடை |
2. |
சிலம்பு எனும் பாட்டுடைச் செய்யுளை
இளங்கோவடிகள் எழுதுவதற்கு உந்துதலாக
இருந்த காரணங்கள் என்ன?
|
விடை |
3. |
கலையின் நோக்கம் பற்றித் தமிழ் மரபில் ஆழமாகவேரூன்றியுள்ள கருத்து, யாது?
|
விடை |
4. |
காந்தியடிகளுக்கு மன எழுச்சி தந்தஎழுத்தாளர்கள் யார்?
|
விடை |
5. |
கலையின் நோக்கம் வெற்றிபெற வேண்டுமானால்,அது எவ்வாறிருக்க வேண்டும்?
|
விடை
|
|
|
|