5.4 தொகுப்புரை | |||||||||||||||||||||||
திறனாய்வு அணுகுமுறைகளில் சிறப்பானதோர் இடத்தை வகிப்பவை, வரலாற்றியல் திறனாய்வு, உளவியல் திறனாய்வு மற்றும் தொல்படிமவியல் திறனாய்வு ஆகியவையாகும். காலம், இடம் எனும் மையங்களில் இலக்கியம் காலூன்றி நிற்கிறது எனும் கருதுகோளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது வரலாற்றியல் அணுகுமுறை. இது காலச் சூழமைவையும், காலந்தோறும் இலக்கியம் பெறுகின்ற மாற்றத்தையும் ஆராய்கிறது. | |||||||||||||||||||||||
உள்ளத்தின் கோலங்களையும் இலக்கியத்தில் அவை
சித்திரிக்கப் பட்டிருக்கின்ற கோணங்களையும் உளவியல்
அணுகுமுறை உள்நுழைந்து வெளிப்படுத்துகிறது. சிக்மண்ட் ஃபிராய்டு
வகுத்த பகுப்பியல் உளவியல் என்பது, திறனாய்வில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. |
|||||||||||||||||||||||
உளவியல் ஆராய்ச்சிக்குட்பட்ட ஒரு பகுதியாகக் கருதப்படக் கூடியது, தொல்படிமவியல் அணுகுமுறை. கூட்டு நனவிலி மனம் என்ற கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டு இது அமைகிறது. மனித குலத்தின் நினைவோட்டங்களில் ஆழமாகப் பதிந்துள்ள தொன்மங்களைப் பற்றியும் தொல்படிமவியல் அணுகுமுறை ஆராய்கிறது. | |||||||||||||||||||||||
|