பாடம் - 3
D06133 இலக்கிய உரையாசிரியர்கள் - II

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

     சென்ற பாடத்தில் இலக்கிய உரையாசிரியர்கள் பற்றிப் பார்த்ததைத் தொடர்ந்து, இலக்கிய உரைகள் பற்றி இது பேசுகிறது.

    காப்பியங்கள், சமய இலக்கியங்கள் ஆகியவற்றிற்கு எழுந்த உரைகள் பற்றிச் சொல்கிறது.

    அன்றைய     காலப்பகுதியைச் சேர்ந்த முக்கியமான உரையாசியர்களாகிய அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் முதலியவர்கள் பற்றிக் கூறுகிறது.

    இருபதாம் நூற்றாண்டின் உரையாசிரியர்கள் - அவர்கள் பணி - பற்றிக் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழில் எந்தெந்த     இலக்கியங்களுக்கு உரைகள் எழுதப்பட்டன என்பதனை அறிந்துகொள்ளலாம்.
  • காப்பிய     உரையாசிரியர்களின்     தேவைகளையும் பண்புகளையும் அறிந்து கொள்ளலாம்.
  • சமய நூல் உரைகளின் தகுதிகளையும் பண்புகளையும் அறிந்து கொள்ளலாம்.
  • திருவாய்மொழி வியாக்கியானங்கள் எவை, அவற்றின் தன்மைகள், அளவுகள் என்ன என்பதனை அறிந்து கொள்ளலாம்.
  • பெரியவாச்சான் பிள்ளையின் பங்களிப்பினை அறியலாம்.
  • இருபதாம் நூற்றாண்டின் உரையாசிரியர்களின் பணி எத்தகையது என்பதனை அறியலாம்.
  • மறைமலையடிகளின் உரைபற்றிய கருத்துகளைத் தெரிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு