இப்பாடப்
பகுதி தமிழ்ச் சிறுகதை வரலாற்றில்
குறிப்பிடத்தக்க படைப்பாளியாக விளங்கிய விந்தனை அறிமுகம்
செய்து, அவர் எழுதிய சிறுகதைகள், அவற்றின் வழி வெளிப்படும்
அவரது சமுதாயப் பார்வை, பாத்திரப் படைப்புத் திறன்,
நடைத் திறன் ஆகியவற்றை விளக்குகிறது.
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
தமிழ்ச் சிறுகதைப்
படைப்பாளிகளுள் ஒருவரான விந்தனைப் பற்றி நன்கு அறிந்து
கொள்ளலாம்.
விந்தனின்
சிறுகதைகளின் கதைப்போக்குகளை முழுமையாக உணர்ந்து
கொள்ளலாம்.
விந்தனின்
சமுதாயப் பார்வை எத்தனை ஆழமானது என்பதைப் புரிந்து
கொள்ளலாம்.
விந்தனின்
நடையில் காணப்படும் எளிமை, அவர் கையாளும் உவமைகள்,
அவரது சொல்லாட்சித் திறன் இவற்றை விளங்கிக் கொள்ளலாம்.