இவர் படைத்த
பல சிறுகதைகள் தமிழன் எக்ஸ்பிரஸ்,
குங்குமம், குமுதம், தினமலர், கல்கி, நக்கீரன், இந்தியா டுடே,
அலைகள், தினமணி கதிர், புதிய மனிதன், தாய், மங்களம்,
காலச்சுவடு, ஆனந்த விகடன், தமிழரசு, மின்மினி ஆகிய
இதழ்களில் வெளிவந்தவை.
1986 ஆம் ஆண்டில் வெளிவந்த
நேற்று மனிதர்கள்
சிறுகதைத் தொகுதி 1997 ஆம் ஆண்டில் நான்காம் பதிப்பாக
வெளிவந்துள்ளது. சைக்கிள் தொடங்கி நேற்று
மனிதர்கள்
முடிய 13 கதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு அது.
1995 இல் வெளிவந்த விட்டு விடுதலையாகி
சிறுகதைத்
தொகுப்பில் 11 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
2001 இல் வெளிவந்த இருட்டின்
வாசல் சிறுகதைத்
தொகுப்பில் ஒரு மதியப் பொழுதில் தொடங்கி, சிட்டை
முடிய 17 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. நாளிதழ்களிலும்,
வார இதழ்களிலும், இலக்கிய மலர்களாக வரும்
மாத
இதழ்களிலும், தீபாவளி மலர்களிலும், இவரது சிறுகதைப்
படைப்புகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன.
|