பாடம் - 6
 

P10136 ஜே.ஆர்.ரங்கராஜுவின் புதினம் - மோஹன சுந்தரம்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

துப்பறியும் புதின ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜே.ஆர்.ரங்கராஜு. அவரது ‘மோஹன சுந்தரம்' என்ற நாவல் 15 பதிப்புகளில் வெளிவந்துள்ளது. மோஹன சுந்தரம் என்ற நாவலின் படைப்புத்திறனை இந்தப் பாடம் சொல்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

ரங்கராஜுவின் துப்பறியும் நாவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.

பொழுதுபோக்கு நாவல்களில் இவரது நாவல்களே அதிகமான பதிப்புகளாக வெளிவந்தமை பற்றி அறிய முடிகிறது.

1932ஆம் ஆண்டு வெளிவந்த மோஹனசுந்தரம் என்ற நாவலின் கதைச்சுருக்கத்தை அறியலாம்.

மோஹன சுந்தரம் என்ற நாவலில் இடம்பெறும் பாத்திரப் படைப்பு பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

மோஹன சுந்தரம் நாவலின் இலக்கிய உத்திகள் குறித்து அறியலாம்.

இந்நாவலின் மூலமாக ஆசிரியரின் மொழிநடை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு