3.5 பாரதியாரின் வசன கவிதை |
தமிழ் இலக்கிய வரலாற்றில் கம்பருக்குப் பின் பாரதியின் சொல்லாட்சியில் தான் வேகமும் உணர்ச்சியூட்டும் திறனும் மிகுந்து காணக்கிடக்கின்றன. பழைய சொற்களுக்குப் புதிய வேகம் தந்தவர் பாரதி. பாரதியின் வசன கவிதையில் அவர் வழங்கியிருக்கும் சொற்களும், சொற்றொடர்களும் புதுமையானவை. |
ஞாயிறே, இருளை என்ன செய்து விட்டாய்? |
ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கி விட்டாயா? |
. . . . . . . . . . . . . . |
உணர்வே நீ வாழ்க |
நீ ஒன்று நீ ஒளி |
நீ ஒன்று நீ பல |
நீ நட்பு, நீ பகை |
உள்ளதும் இல்லாததும் நீ |
அறிவதும் அறியாததும் நீ |
நன்றும், தீதும் நீ |
நீ அமுதம், நீ சுவை |
நீ நன்று, நீ இன்பம் |
பழைய சொற்களில் புதிய கற்பனைக் கோலங்களைப் பயன்படுத்தி அழகும் எளிமையும் உணர்ச்சியும் மீதூரப் பாரதியார் மொழியினைக் கையாளும் போதுதான் தமிழ்மொழியின் வலிவும் வனப்பும் நமக்குப் புலனாகின்றன. |