தன் மதிப்பீடு - I : விடைகள்

2.

மொழிநடையின் தெளிவுக்கு இலக்கிய ஆசிரியர் கடைப்பிடிக்கவேண்டிய கொள்கைகள் யாவை?

சொல்ல வந்த பொருளை நேரே சொல்வது; பொருளைத் திரித்து மாறுபடச் சொல்லாமலிருப்பது; அவசியமில்லாத அடைமொழிகளைச் சேர்க்காமலிருப்பது; உலகத்தார்க்குப் பொருள் விளங்கும்படி எழுதுவது; மனமறிந்த உண்மையை அச்சமின்றி உள்ளவாறே சொல்வது. இவை யாவும் நடையின் தெளிவுக்கு இலக்கிய ஆசிரியன் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் என்று பாரதி காட்டுகின்றார்.
 

முன்