4.6. தொகுப்புரை |
உ.வே.சா. வண்டமிழ் வழங்கிய வள்ளல். பைந்தமிழைக்காக்கப் பிறவி எடுத்தவர். உ.வே.சாமிநாதையர் பொதுமக்கட்குப் புரியும் வகையில் எளிய நடையில் பழகு தமிழ்ச்சொற்களைக் கொண்டு மரபு கெடாது எழுதினார். |
தெளிவான நடையில் எல்லாருக்கும் விளங்கும்சொற்களைப்பெய்து உயிரோவியத்தைப் போலத் தாம் கருதுவதைஎழுதும் ஆற்றல் சாமிநாதையருக்கு இருந்தது. |
எந்த நிகழ்ச்சியைக் கூறினாலும் அதைப் படிப்பவர் மனத்தில்பதியும்படி சுவையுடன் விரித்தெழுதுவது உ.வே.சாமிநாதையர் இயல்பு.உ.வே.சா.வின் உரைநடையால் தமிழ் உரை நடை வளம் பெற்றது. |
தன் மதிப்பீடு : வினாக்கள் - II | ||
1. |
தமிழ் மறுமலர்ச்சியின் தாயும் தந்தையுமாகத் திகழ்ந்தவர்கள் யார்? | விடை |
2. | பதிப்புத்துறையின் பெருவேந்தர் யார்? | விடை |
3. |
உ.வே.சா. பதிப்பித்த முதல் நூல் எது? | விடை |
4. |
உ.வே.சா. தம் ஆசிரியர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மீது கொண்டிருந்த அன்பை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்? | விடை
|
5. |
உ.வே.சா.வின் உரை நடை எவ்வாறு அமைந்துள்ளது? | விடை |
6. |
‘குடந்தை நகர் கலைஞர்கோ’ - யார்? | விடை |